Saturday 23 August 2014

ஆயிரம் ஜோதி காளிகாதேவி பூஜை - பௌர்ணமி யாகம் - அன்னதானம் – Annathanam – Kaali booja

ஆயிரம் ஜோதி காளிகாதேவி பூஜை - பௌர்ணமி யாகம் - அன்னதானம் – Annathanam – Kaali booja






ஆயிரம் ஜோதி காளிகாதேவி பூஜை - பௌர்ணமி யாகம் - அன்னதானம் – Annathanam – Kaali booja


தேவலோக கிரி என சித்தர் பெருமக்களால் வர்ணிக்கப்படும் சுருளிமலை யில் முப்பத்து முக்கோடி தேவர்கள், நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகள், நவகோடி சித்தர்கள் ஆசியுடன் ஓம் நீலகண்ட ரிஷி ஆஸ்ரமத்தில், மாதந் தோறும் பௌர்ணமியன்று ஆயிரம் ஜோதி காளிகாதேவி சன்னதியில் சிறப்பு பூஜையும், அன்னதானமும் நடைபெறுகின்றது.


சுருளிமலை சித்தர் நீலகண்ட ரிஷி அவர்களின் பல வருட தவத்தின் போது சித்தர்களால் நேரில் உபதேசிக்கப்பட்ட தேவலோக மகா மந்திரங்க ளினால் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று 108,மூலிகைகளினால் மகா யாக வேள்வியும், சுருளிமலையில் மாயமாய் அரூப சொரூபமாக உலாவி வரும் சித்தர்கள், ரிஷிகளுக்கு பிரசாத படையலும் அர்ப்பணித்து இதில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் மகேஸ்வர பூஜை எனப்படும் அன்னதானமும் நடைபெறுகின்றது.


இம் மகாவேள்வி யாகத்திலும், ஆயிரம் ஜோதி காளிகாதேவி சிறப்பு பூஜை யிலும் கலந்து கொள்ளும் அனைவரின் கர்மவினை தோஷங்கள், கிரகவினை தோஷங்கள், எதிரிகளின் செய்வினை தோஷங்கள், கண்திருஷ்டி தோஷங் கள்  அனைத்தும் நீங்கி சித்தர்கள், ரிஷிகளின் அருளாசிகள் பரிபூரண மாக கிட்டும்.வாழ்வின் அனைத்து செல்வ வளங்களும் பெற்று நிம்மதியும், சந்தோஷ முடன் வாழலாம்.


ஒவ்வொரு மாதமும் நடைபெறும்  ஆயிரம் ஜோதி காளிகாதேவி சிறப்பு பூஜை, யாக வேள்வி   மற்றும் அன்னதானத்தில் பங்கு கொள்ள விரும்பும் அன்பர்கள் கீழ்க்கண்ட செல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.



நன்றி !
ஓம் நீலகண்ட ரிஷி ஆஸ்ரமம் 
சுருளிமலை அடிவாரம்,
ஐயப்பன் கோவில் எதிரில்,
சுருளி தீர்த்தம்,
சுருளிப்பட்டி - P.O 
தேனி மாவட்டம் - 625516
செல் : 9095590855 - 7373732338

Mail : neelakandarisi@gmail.com

    
  

   

  


No comments:

Post a Comment